Sunday 25 September 2011

செய்திகள் 24/09


சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு
நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் உதவித் தூதுவர் சவேந்திர சில்வா அந்நாட்டின் இராணுவத்தில் 58வது படையை தலைமை வகித்து நாற்பது ஆயிரத்துக்கு மேலான அப்பாவித் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவராவர்.
இதற்கு பரிசாக அந்நாடு ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் பதவியை அவருக்கு அளித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவை இவ்வாரம் ஆரம்பித்து சிறப்பாக நடைபெறும் இவ்வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவரை போர்க்குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
58வது படையணியின் தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா மிகவும் கொடுமையானதும் தமிழ் மக்களுக்கு எதிராக அதிக துன்பங்ளையும் விளைவித்த போரை நடத்தினார்.
வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடும் துயரை நேரடியாக அப்பாவி தமிழ் மக்கள் மேல் ஏவியவர்.
பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவம் மிக அதிகளவில் போர்க்குற்றங்களையும் மனித இனத்திற்க்கு எதிரான குற்றங்களையும் இழைத்திருந்தது.
குறிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய பொதுமக்களையும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களான வைத்தியசாலைகளையும் ஜெனரல் சில்வாவின் சிங்கள படைகள் நேரடியாக தாக்கியது.
சிறிலங்காவின் சட்டத்தை மட்டுமல்ல அமெரிக்கச் சட்டம், சர்வதேச சட்டம் அனைத்தையும் மீறய செயலாகும்.
ஜெனரல் சில்வாவும் அவரது படையினரும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்களையும் சித்திரைவதை செய்து கொலை செய்திருப்பது போர் விதிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களாகும்.
அமெரிக்க நீதிமன்றம் நீதிக்கும் செய்த குற்றங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பும் கொடுக்காவிட்டால் சிறிலங்காவில் குற்றம் இழைத்தவர்கள் தொடர்ந்தும் தண்டனை பெறுவதிலிருந்து தப்பலாம் என்றே எண்ணுவர் என வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞ்சர் அலி பெய்டுன் அவர்கள் குறிப்பிட்டார்.
இச் சட்டநிபுணர் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாசிங்டன் கல்லூரியின் சட்டபீடத்தில் மனித உரிமைகள் மீறல் விடயத்தில் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய துறையில் முன்னணி வகிக்கின்றவர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க முயற்சி எனவும் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கு மட்டும் தமது முயற்சி தொடரும் எனவும் சட்டவல்லுநர் பெய்டுன் குறிப்பிட்டார்.
நியூயோர்க் நகரில் 66வது ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்ள சென்றிருக்கும் சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஐபக்சவுக்கு எதிராக பல ஆயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும் இவ்வேளையில் நீதியையும் செய்த கொடுமைகளுக்கு பொறுப்பு ஏற்கும் நிலைமைகளை உருவாக்கியிருக்கும் இச்சந்தர்ப்பம் மிக முக்கியமானது என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
*******************

இராஜதந்திரப் போரில் உலகத் தமிழினம்
அரசுடன் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுத் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் தந்திரோபாயங்களை நாம் யோசிக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நடப்பது இராஜதந்திரப் போராகும். இந்தப் போரில் நாம் வெல்ல வேண்டும்; வென்றே தீர வேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்.
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நற்பிட்டிமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச அரங்கில் அரசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக பேச்சு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
அந்த சர்வதேச அரங்கின் ஆதரவை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, அந்தப் பலத்தோடு நம் உறவுகளான புலம்பெயர்ந்தவர்களின் ஆதரவோடும் இன்று அரசுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
*******************

தமிழின கல்வியை தகர்க்க முயலும் மகிந்த குடும்பம்
வன்னியில் செயற்பட்டு வந்த கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் கட்டிட தொகுதிகள் சில நாமல் ராஜபக்ஸவின் பணிப்பின் பேரில் அண்மையில் இரவோடிரவாக உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் சகிதம் உள்ளே புகுந்த சிலரே கட்டிடங்களை இடித்தகற்றியுள்ளனர்.
ஏ-9 வீதியோரமாக அமைந்துள்ள கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரி புலம் பெயர் தமிழ் உறவுகளது உதவிகளுடன் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கை கல்வி அமைச்சினில் பதிவு செய்யப்பட்டே இது வரை இயங்கியும் வந்திருந்தது.
இந்நிலையில் கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் முகப்பின் இருமாடிக் கட்டங்களை இளைஞர் விவகார அமைச்சின் தேவைக்கென நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ தற்போது பறித்துக்கொண்டுள்ளார்.
இதையடுத்து கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் அனைத்து செயற்பாடுகளும் முடங்கிப்போயுள்ளது. கற்பித்தல் செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தொழில் நுட்பக்கல்லூரியின் வளவினுள் பின்புறமாக இருந்த கட்டடங்களை இடித்தகற்றிய பின் அப்பகுதியில் மேலும் மூன்று மாடி கட்டிடமொன்றினை அமைக்க நாமல் ராஜபக்ஸ முற்பட்டுள்ளார்.
எனினும் தொழில் நுட்பக்கல்லூரியின் வளவினுள் கடந்த ஜந்து வருட காலப்பகுதியினுள் கட்டப்பட்ட கட்டிடங்களே உள்ளன.
அவற்றினை இடித்தழிக்க பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
இதையடுத்தே கனரக வாகனங்கள் சகிதம் இரவோடிரவாக உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்தங்காரணமாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள் கவனிப்பாரின்றி வன்னியெங்கும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
*******************

எச்சரிக்கும் சரத் பொன்சோகா
களனியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அமைச்சர் மத பேதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் போதைப் பொருள் விற்பனை செய்யும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
களனியைச் சேர்ந்த அமைச்சர் மக்களின் கை, கால்களை உடைப்பதாக எச்சரிக்கின்றனார்.
இவ்வாறான நபர்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைத்ததால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடங்களை நாம் கற்பிப்போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
*******************

மகிந்த - மன்மோகன் சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 66 ஆவது கூட்டத்தொடரில் நேற்று அரசுத் தலைவர் உரையாற்றிய பின்னரே இந்திய பிரதமருடனான சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழர்க்கான அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மகிந்த தனது உரையில் சர்வதேச தீர்வு சாத்தியமற்றது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
*******************


மர்ம மனிதனை தொடரும் முகமூடி திருடன்
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபெற்ற திருட்டு முயற்சியின் போது யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு வைத்தியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி கருவப்புலம் வீதியைச் சேர்ந்த இந்த மருத்துவர்களின் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு பணம், நகை போன்ற பெறுமதியான பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொக்குவில் கோணவளை வீதியிலுள்ள வங்கி ஊழியர் வீட்டுக்குச் சென்ற திருடர்கள் ஊழியரைத் தாக்கி விட்டு பணம், நகை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் தங்கள் முகத்தினை முகம் மூடியினால் மறைத்துக்கொண்டு வந்ததாக பாதிக்கப்பட்டவர்களால் கோப்பாய் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
*******************

நம்பிக்கையிழக்கும் ரணில்
இனியும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டம் ஒன்றின் போது, ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டில் இருந்து இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? கடந்த ஒன்பது வருடங்களில், தொழில் வழங்கி இருக்கிறதா? பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதா? அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் ஏழைகளின் வீடுகளை உடைக்கிறது அரசாங்கம். அவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறது.
இதற்கு மாற்று வழி, ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு வரசெய்வதே ஆகும் என ரணில் விக்ரமசிங்க இதன் போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, நாட்டின் எதிர்கட்சிகள், அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது என சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டில் அரசாங்கத்துக்கு எந்த சவால்களும் இல்லை.
எதிர்கட்சித் தலைவர், அவரது கட்சியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்.
ஏனைய உறுப்பினர்கள் கட்சியின் மூலஸ்தானத்தை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவரவர் வேலைகளை அவரவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்கொள்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் எந்த சவாலும் இல்லை.
ஆனால் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்கள் உள்ளன.
ஆனால் அதனையும் அரசாங்கம் சமாளிக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
*******************

கண்ணிவெடியை தேட முடியாமல் தொல்பொருள் தேடும் சிங்களம்
வடக்கில் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டொக்டர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ்ப்பாணத்தில் 50 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாவதற்கு முன்னதாக குறித்த தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்ட சில பிரதேசங்களிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கண்ணிவைடிகளை அகற்ற முடியாத அரசு தொல்பொருளை தேடிச் செல்வது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
*******************

ஜே.வி.பியின் தொடரும் குளறுபடி
ஜே.வி.பி கட்சி விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படும் சொற்ப அளவிலான நபர்கள் கட்சிக்குள் முறுகலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருப்பதனால் குழப்ப நிலைமைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
நேற்று ஊடகங்களில் வெளியான பல செய்திகள் அடிப்படையற்றவை என சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அவர் நேர்காணல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பி கட்சி உட்கட்சி பூசல் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரண்டு தரப்பினரும் கட்சி ஆதரவாளர்களின் ஆதரவினை திரட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருடன் எந்தவிதமான இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ளத் தயாரில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் என்ற பெயரில் கட்சியில் எந்தவொரு உறுப்பினரும் செயற்படவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரேம்குமார் எங்கிருக்கின்றார் என்பது கூட தங்களுக்குத் தெரியாது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
*******************