Monday 29 August 2011

URGENT ACTION NEEDED


URGENT ACTION NEEDED

Please to cancel the death sentence given to Perarivaalan, Murugan and Shaanthan.We urge you to send emails and fax messages to the following and spread the word by forwarding this message to all you know.


Her excellency Pratibha Patel 
Email: presidentofindia@rb.nic.in
Fax no: 00911123017290

His excellency Mr Manmohan Singh
Email: manmohansingh@sansad.nic.in
Fax no: 00911123019545

Mr.P.Chidambaram
Email: hm@nic.in
Fax no: 00911123094221

[Cheif minister of the state Tamil Naadu] Dr J Jayalalitha
Email: cmcell@tn.gov.in
Fax no: 00914428133510

Send email to lawyers
packmymails@gmail.com

Act fast and send before tuesday. Hurry.
Thank You













Letter Format


From

xxxxxx,
xxxxxxx


To

The Hon’ble Chief Minister
Tamil Nadu
Secretariat
Fort St. George
Chennai. 600 009

Sub: APPEAL TO THE HON’BLE CHIEF MINISTER OF TAMIL NADU TO SAVE THE LIFE OF MURUGAN, SANTHAN & PERARIVALAN, WHO WERE SENTENCED TO DEATH IN RAJIV GANDHI’S CASE AND WHOSE MERCY PETITIONS WERE RECENTLY REJECTED BY THE HON’BLE PRESIDENT OF INDIA

Respected Madam:

Mahatma Gandhi long ago wrote in the Harijan :
“God Alone Can Take Life
Because He Alone Gives It”

In one of the most civilized countries of the world, it is saddening, death penalty still reigns. We are shocked beyond words that 3 youngsters, who have spent almost their entire life since their teens in solitary confinement, are condemned to face the gallows. Murugan, Santhan and Perarivalan who were sentenced to death in Rajiv Gandhi’s case appealed to the President of India for clemency under Article 72 of the Constitution on 26th April 2000. They have all along been hopeful that they would either be released from prison or their death sentence would be converted into life imprisonment by the President of India. They have been awaiting almost every dawn a news of relief from the President. Alas ! The President of India turned down their clemency petition after making them wait for more than eleven long years.

The Supreme Court of India has in the past converted death sentence into imprisonment for life only on the ground that clemency petition of a convict was pending with the President of India for more than 2 years. A five Judge Bench of the Supreme Court of India has in Smt.Triveniben Vs. State of Gujarat held : “As between funeral fire and mental worry it is the latter which is more devastating, for, funeral fire burns only the dead body while the mental worry burns the living one.” The death sentence of these 3 persons were confirmed by the Supreme Court on 11 May 1999. It is more than 12 years since their death sentences were confirmed and it is more than eleven years since they made clemency petitions to the President of India. They have been under the shadow of death all these years suffering every moment in a condemned cell.

There have been cases that even after the rejection of the clemency petition by the President of India, State Governments have considered afresh the need for clemency and converted the death sentence into imprisonment for life.

As early as in February 1979, the Supreme Court of India speaking through Justice V.R.Krishna Iyer, while converting death sentence of a convict into life imprisonment, said: “Our culture is at stake, our karuna is threatened, our Constitution is brought into contempt by a cavalier indifference to the deep reverence for life and a superstitious offering of human sacrifice to propitiate the Goddess of Justice”

It is submitted that the sovereign power under Article 161 of the Constitution can be exercised by the Hon’ble Governor on the advice of Council of Ministers for converting the death sentence of Murugan, Santhan and Perarivalan into imprisonment for life even after the rejection of their clemency petitions by the Hon’ble President of India under Article 72 of the Constitution.

It is submitted that pendency of the clemency petitions of these 3 persons with the Hon’ble President of India for more than 11 years may be considered as a significant factor for exercising the sovereign power under Article 161 of the Constitution and for converting their death sentence into imprisonment for life. Their incarceration for more than 20 years may also be treated to be an important factor for commutation of their death sentence into life imprisonment.

We earnestly appeal to the Hon’ble Chief Minister of Tamil Nadu to save the lives of these 3 persons by exercising the sovereign power of the State of Tamil Nadu under Article 161 of the Constitution, for which act the world Tamil community would ever be grateful.

Yours sincerely,
xxxxx





------------------------------------------------------------




Letter Format


to: manmohan@sansad.nic.in
cc: presidentofindia@rb.nic.in , hm@nic.in , cmcell@tn.gov.in
Subject: Abolish the death penalty

Rt.Hon. Prime minister Manmohan Singh,
State of India.

The death penalty is the ultimate denial of human rights. It is the premeditated and cold-blooded killing of a human being by the state. This cruel, inhuman and degrading punishment is done in the name of justice. It violates the right to life as proclaimed in the Universal Declaration of Human Rights.

India, as a country of 21st century should adhere these noble vales and must annul the death sentemce of Murugan, Santhan and Perarivalan.

Truly,

CC:
Hon. President Prathiba Patil
Hon. Home Minister P.Chidambaram
Hon. Chief Minister of Tamilnadu 






செய்திகள் 29/08


3 பேருக்காக உயிர்த்தியாகம்: செங்கொடி உடல் நாளை அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

காஞ்சீபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் செங்கோடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி,
தமிழர் நலனுக்கு ஆதரவான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை தூக்கிலிடக்கூடாது என்று தமிழ் நாடு முழுதும் நடந்து வரும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார். 


நேற்று காலை காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் தாலுகா அலு வலகம் வந்த அவர் திடீ ரென தன் மீது மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி, அதே இடத்தில் பலியானார். சிவகாஞ்சிபுரம் போலீசார் அவரது கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 


செங்கொடியின் கைப்பை உடல் அருகில் கிடந்தது. போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, அதனுள் அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்ததை கண்டனர். அந்த கடிதத்தில் தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் என்று செங்கொடி எழுதி இருந்தார். 


இதன் மூலம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக செங்கொடி உயிர்த்தியாகம் செய்திருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் இதுவரை எத்தனையோ உயிர் தியாகம் நடந்துள்ளது. ஆனால் தமிழனுக்காக ஒரு வீரப்பெண்மணி உயிர் தியாகம் செய்தது இதுதான் முதல்முறை. கடைசி வரை இது போன்ற உயிர் தியாகங்கள் போராட்டத்தின் முடிவுகள் அல்ல. 


நமது கொள்கைக்காக கடைசி வரை போராடி வெல்ல வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இளைய சமுதாயம் உயிர் தியாகம் செய்யாமல் போராடி ஜெயிக்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக 3 பேரின் தூக்கு தண்டனையை கருணை உள்ளத்தோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார். 


செங்கொடியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் உள்ள பெரியார் தூண் அருகில் செங்கொடி உடல் வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் திரண்டு வந்து செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 


இன்று மாலை 4 மணி வரை செங்கொடி உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அதன் பிறகு அவரது சொந்த ஊரான கீழ்கதிர்பூர் கிராமத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்படும். இன்றிரவு முதல் நாளை காலை வரை உறவினர்கள் அஞ்சலிக்காக செங்கொடி உடல் வைக்கப்பட்டிருக்கும். நாளை பகல் 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும். 


அதன் பிறகு செங்கொடி உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும். இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.


தூக்குத் தண்டனைக் கைதிகள் மூவருக்குமான நம்பிக்கை ஒளி தமிழக முதல்வரும், தமிழக ஆளுனருமே!!

செப்டம்பர் 9ம் திகதி தமிழர்களின் வரலாற்றில் ஒரு “கறுப்பு வெள்ளிக்கிழமையாக” அமையப் போகிறது என்பது தான் இப்போதைய முடிவு. இருந்த போதும் இந்த மூவருக்கும் உள்ள இறுதியான தெரிவுகள் தமிழக முதல்வரும், தமிழக ஆளுனரும் என்பதையே கடந்த காலத்தில் இடம்பெற்ற மரண தண்டனைக் குறைப்புக்கள் வலியுறுத்துகின்றன. 
ஜனாதிபதி இந்த மூவரின் கருணை மனுவை நிராகரித்தாலும் தமிழக மாநில அரசு மற்றும் தற்போதைய தமிழக மாநில ஆளுநர் இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு சந்தர்ப்பம் மிக எளிதாக உள்ளது.
ஜனாதிபதி கருணை மனுவை மறுத்து விட்டார் என்ற காரணம் இவ் விடயத்தில் கருத்திலெடுக்கப்பட வேண்டிய தேவையில்லை. தமிழக அரசும், தமிழக ஆளுனரும் இந்த விடயத்தில் முடிவை எடுக்க முடியும்.
அதுபோலவே தமிழக மாநில அரசு ஏற்கனவே நான்கு மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுட் தண்டனையாக மாற்றியிருக்கிறது. தியாகி திலீபன் நற்பணி மன்றத்தின் தலைவர் தோழர் தியாகு, அவரது மாமனாரான தோழர் லெனின் எனப்படும் அரங்கசாமி மற்றும் தோழர் குருமூர்த்தி மற்றும் தோழர் கைலைப்பெருமாள் ஆகியோரது மரண தண்டனைகள் தமிழக சட்டசபையாலேயே ஆயுட் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தன.
எனவே இப்போது இந்த வழக்கில் அவ்வாறு செயற்படுவது தமிழக அரசிற்கு அவ்வளவு சிரமமான காரியமல்ல, ஆனால் தனது ஆட்சியைத் தக்கவைப்பது என்ற காரணத்திற்காக அது தமிழர்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் இந்த விவகாரத்தில் பெற்றுச் செயற்பட முனையலாம்.
முருகன், நளினி, அறிவு, சாந்தன் நால்வரும் தமிழக ஆளுனரான பாத்திமா பீபியிடம் ஏப்ரல் 25, 2000ல் கருணை மனுச் சமர்ப்பித்தனர். பாத்திமா பீபி அவர்கள் நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததோடு மற்றையவர்களிற்கு மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார்.
நளினியின் மரண தண்டனையை ஆயுட்தண்டனையாகக் குறைத்ததன் மூலம் தமிழக அரசு, தமிழக ஆளுனர் ஆகியோர் ஏற்கனவே தங்களிற்கு இந்தத் தண்டனைகளைக் குறைப்பதில் அதிகாரம் இருக்கிறது என்பதைத் தெரிவித்து விட்டனர். எனவே அறிவு, முருகன், சாந்தன் ஆகியோரது மனுக்களை மீள் பரிசீலனைக்கு எடுப்பது தமிழக அரசிற்கு அவ்வளவு சிரமமான வேலையாக இருக்காது.
அத்தோடு மேற்கண்ட நடவடிக்கைக்கு மேலாக ஜனாதிபதிக்கும் இவர்கள் மூவர் சார்பாக மீண்டும் கருணை மனுச் சமர்ப்பிக்கப்படலாம். 1998ல் அவ்வாறு ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த விஸ்ணுவர்த்தன் மற்றும் செல்லபதி ராவ் ஆகியோர் இவ்வாறு மீள் மனுச் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு ஜனாதிபதி அலுவகம் பதிலிறுக்கவில்லை.
ஜனாதிபதி பதிலிறுக்காமல் விட்டது தவறு என்பதற்காக உச்சநீதிமன்றம் அவர்களது தண்டனையை ஆயுட்தண்டனையாக மாற்றியது இந்திய நீதித்துறையில் புதிய சகாப்தமெனக் கருதப்பட்டது.
அதுபோலவே சீ.ஏ.பாலன் என்பவரிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை குறைக்க மத்திய அரசு மறுத்த போது கேரள மாநில அரசு நேரடியாக மத்திய அரசை “நீங்கள் இந்தத் தண்டனையைக் குறைக்கவில்லையென்றால் நாங்கள் சட்டசபையின் அதிகாரம் மூலம் குறைப்போம்” எனத் தெரிவித்ததையடுத்து உடணடியாக அம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதுபோல இந்திய நீதி வரலாற்றில் இடம்பெற்ற பல உதாரணங்களும் சுட்டிக்காட்டுவது யாதெனில் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக ஆளுனர் ஆகியோரால் இந்தத் தண்டனைகளைக் குறைக்க வைக்க முடியும்.
இதற்கான அனைத்துத் தமிழக கட்சிகளின், தலைவர்களின் ஆதரவையும் தனது ஆட்சியைத் தக்க வைக்க ஜெயலலிதா எதிர்பார்ப்பார் என்பதோடு அவ்வாறன ஒரு ஒட்டுமொத்த ஆதரவு ஒரு தீர்மானமான வழிபாட்டிற்கு வழி செய்யும் என்பதே உண்மையாகும்.


Tuesday 2 August 2011

செய்திகள் 02/08


வாக்காளர் இடாப்பு பதிவு!
வெளிநாடுகளுக்குக் கல்வி கற்கச் சென்றவர்கள், வேலை செய்வதற்குச் சென்றவர்கள் மற்றும் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெறாதவர்களின் பெயர் விவரங்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய முடியும் என அறிவிவக்கப்பட்டுள்ளது.
அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரே அவ்வாறு பதிவை மேற்கொள்ள முடியும் என யாழ். மாவட்டத் தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் இன்னும் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பகுதிகளில் மட்டும் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பே மீண்டும் பயன்படுத்தப்படும்.
அத்துடன் 2010 மே இருந்து 2011 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் தம்மைப் புதிய வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளமுடியும்.
இதனைத் தவிர 2010 ஆம் ஆண்டுவாக்காளர் இடாப்பில் பெயர்கள் பதிவு செய்யப்படாத வர்கள் 2011 ஆம் ஆண்டு வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் விநியோகிக்கப்படும் உரிமைக் கோரிக்கை படிவத்தைப் பூரணப்படுத்தி சமர்ப்பிப்பதன் மூலமே தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யமுடியும்.
வெளிநாடுகளில் குடியுரிமை பெறாதவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்களின் பெயர்களையும் புதிய வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************

முல்லைத்தீவில் மீன்பிடி உரிமை யாருக்கு?
கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் முன்னர் இருந்த 44 கரைவலை பாடுகளில் ஓரிரு பாடுகளுக்கே சிங்களவர்கள் உரிமம் வைத்திருந்துள்ளதாகவும் மற்றைய பாடுகளுக்குரிய உரிமத்தை தமிழர்களே வைத்திருந்ததாகவும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினரான முன்னாள் கல்வியதிகாரி அண்டனி ஜெகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1984 இல் தமிழர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு, அங்கு சிங்கள மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கரைவலை உரிமங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னர் இருந்த 44 பாடுகள் இன்று 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் அண்டனி ஜெகநாதன் தெரிவித்தார்.
கொக்கிளாய் பகுதிக்கு உரிம ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்ற தமிழ் மீனவர்கள், அங்கு சிங்கள முதலாளிமார் உரிமங்களை காட்டி தொழில் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சரான ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அந்தப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்து, விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கு மாத்திரமே அங்கு மீண்டும் கரைவலைத் தொழில் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அதுதவிர, தென்பகுதியில் இருந்து எவரும் புதிதாக அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தமிழர்களின் உரிமங்கள் சிங்களவர்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை அவ்வாறு தமிழர்கள் எவருக்காவது உரிமம் இருந்து, அவர்கள் அங்கு கரைவலை தொழில் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால், தன்னிடம் புகார் செய்யும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை தடுத்து நிறுத்தும் இராணுவம் தனது பணியைச் செய்ய தமிழர்கள் எப்படி அமைச்சரிடம் முறையிடுவது என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
****************
தலைமைத்துவத்தில் மாற்றம் இல்லை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இந்த வருடம் எதுவித மாற்றமும் ஏற்படாது என்று கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
கட்சியின் யாப்பு திருத்தி அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் கட்சியின் தலைவரும் ஏனைய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
அந்த யாப்பின் அடிப்படையில் இந்த வருடம் தலைமைத்துவப் பதவியிலோ அல்லது வேறு பதவிகளிலோ மாற்றங்கள் எவையும் இடம்பெறாது.
கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் அந்தப் பிளவை இல்லாது செய்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
அந்தப் பணியை தமது கட்சி சரிவர நிறைவேற்றும். தமது கட்சியைக் குறைகூறும் தகுதி இந்த அரசுக்குக் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுக்குள் ஊழல், மோசடிகள் மலிந்துவிட்டன. தரக்குறைவான பெற்றோலை இறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலமும் யஹட்ஜிங் சூதாட்டம் மூலம் இலங்கைக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்டத்தை இலங்கை மக்கள்தான் சரிசெய்ய வேண்டிவரும்.
மக்களின் பணத்தைக் கொண்டுதான் இந்த நட்டம் ஈடுசெய்யப்படும்.
ஆனால் இந்த ஊழல் மோசடிக்குக் காரணமானவர்கள் தப்பிவிடுகின்றனர்.
இவ்வாறான ஊழல், மோசடிமிக்க அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.
இதற்கு கட்சிக்குள் பிளவுபட்டு நிற்காமல் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************
காணொளிப் போர்!
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக சனல்-4 தொலைக்காட்சி சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான காணொளி ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தக் காணொலி 58 நிமிட நேரத்தைக் கொண்டது.
இந்தக் காணொளியில், போரின் போது மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் போர் வலயத்தில் பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் கூறிய கருத்துகளும், ஆயுதம் ஏந்தாத எவரும் கொல்லப்படவில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொலை செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா ஒரு போராளி என்றும் இந்தக் காணொலியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் கூறும் வகையில் இந்தக் காணொளி தயாரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ள போதும், சனல்-4 இன் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான பரப்புரைகளே இதில் அடங்கியுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்தக் காணொலியை வெளியிட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று இதனை காணொளிப் போர் என்று வர்ணித்துள்ளது.
****************
உரிமை வழங்க வேண்டும் - அமைச்சர்
வடபகுதி மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் இடம்பெற்ற இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இலங்கையில் வடபகுதி மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நிலைப்பாட்டை கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும், இனங்களிடையேயான நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்பது தமது நிலைப்பாடாகும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அம் மக்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு அதற்கமைய இதனை வழங்க வேண்டும்.
அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் 13 ஆவது திருத்தத்திற்கமைவான தீர்வு பொருந்தாது.
அதேவேளை இத் திருத்தத்திலுள்ள மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இந்தத் திருத்தத்தை ஒதுக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி அதிகாரப் பகிர்வுடனான தீர்வுகளை வழங்க வேண்டும்.
அத்தோடு காவல்துறை அதிகாரங்களையும் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ் அதிகாரங்களிலுள்ள முக்கியமானவற்றை அதாவது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்களை மத்திய அரசாங்கம் வைத்துக் கொண்டு சிறு குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க முடியும்.
நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளே அதிகம் உள்ளது.
எனவே காணி அதிகாரங்களை மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் இணைந்த குழுவை அமைத்து வழங்க முடியும். அதனை தாம் ஆதரிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பேரினவாதக் கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரமுடைய மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவ் இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானமானது ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************
ஆர்ப்பாட்டம் இன்று!
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் தாக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டணத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
****************
அமைச்சரின் கண்டனம்
உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை இ.தொ.கா.வன்மையாகக் கண்டிப்பதாக இ.தொ.கா.தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சரியான தகவல்களை உரிய வடிவத்தில் வழங்குகின்ற ஊடகத்துறையினரை அராஜக செயற்பாடுகளினால் முடக்குவது வேதனை அளிப்பதுடன் கண்டிக்கத்தக்க விடயமுமாகும்.
சமூக அந்தஸ்து அற்ற காடையர்களைக் கொண்டு அரசியல் இலாபத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் ஊடகத்துறையினரை தாக்குவதும் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதும் தங்களது தவறுகளை மறைப்பதற்கான செயற்பாடுகள் ஆகும்.
இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை கைவிட்டு நீதியான செயற்பாடுகளை முன் எடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.
ஊடகத்துறை மூலம் மக்களுக்கு பல உண்மைகள் தெரியவருகின்றன.
இதனூடாக பல நன்மைகளை மக்கள் அடைகின்றார்கள்.
ஆகையால் ஊடகத்துறையை கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுவதற்கும் சுதந்திரமாக செயற்படுவதற்கும் உதவ வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
அவர்களுக்கான பாதுகாப்பையும் கௌரவத்தையும் வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதுடன் நாட்டினதும் அரசினதும் நற்பெயரை கெடுக்கும் வகையில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளை பெற்றுக் கொடுக்க காவல் துறையினர் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
****************
  



Monday 1 August 2011

செய்திகள் 01/08


சவாலா?
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் ராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்து பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிராக வழங்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழங்குத் தொடர்வதற்கு பிரித்தானியாவில் இயங்கும் ஸ்ரீலங்கா பயங்கரவாத ஒழிப்பு ஒன்றியம் தயாராகி வருகிறது.
ஒரு ட்ரில்லியன் பவுண் நட்ட ஈடுகோரி இந்த வழக்குத் தொடரப்படவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் உறுப்பினர் அனுர மெதகெதர தெரிவித்துள்ளார்.
*************
இல்லாதததை எப்படி காப்பது?
நாட்டின் நற்பெயரை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முடியாமற் போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
சனல்-4 இரு வருடங்களுக்கு முன்னர் முதற்கட்ட காட்சிகளாக நான்கு அல்லது ஐந்து புகைப்படங்களை ஒளிபரப்பியபோது அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார், ஆனால் வழக்குத் தொடரப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர் பல காணொளிகள் ஒளிபரப்பப்பட்ட போதிலும் நாட்டின் நற்பெயரை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முடியாமற் போயுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை நிராயுதபானிகளான மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்படன் செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராகவே இத்தகைய ஆதாரமற்ற குற்றம் சுமத்தப்படுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
முழு உலகும் உணரும் வகையில் சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனைக் கண்டு மேலும் பித்துப்பிடித்த சனல்-4 மீண்டும் மாறுபட்ட ஆவணப்படமொன்றை சர்வதேச மட்டத்தில் வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிராயுதபானிகளான அப்பாவி மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராகவே தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
*************
இந்தியாவை சுற்றிப் பார்க்கப் பறக்கிறார்களோ?
சபாநாயகர் சமல் ராஜபக்­ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இலங்கை-இந்திய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது என சபாநாயகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், நாடாளுமன்றங்களுக்கிடையிலான நட்புறவுச் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை இலங்கைக் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்துவர்.
இந்தக் குழுவில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன் செனிவிரத்ன, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, செல்வம் அடைக்கலநாதன், டி.எம்.சுவாமிநாதன், மாலினி பொன்சேகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
*************
அழைப்பு விடுக்கும் அரசு!
களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கு சிறிலங்கா வருமாறு பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, சனல்-4 தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்திப் பிரிவின் செய்தியாளர் ஜொனாதன் மில்லருக்கும், சனல்-4 தொலைக்காட்சியின் தலைமைப்பீடத்துக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கான பயணத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அதனை படம்பிடிக்க முயன்ற சனல்-4 செய்தியாளர் குழுவை சிறிலங்கா அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
*************
அச்சுறுத்தும் அரச பிரதிநிதி!
பிரித்தானிய ஊடகங்கள் சிறிலங்கா அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களின் உத்தரவுக்கு அமையவே பிரித்தானியா ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராஜதந்திர முனையில் சிறிலங்கா மீது நெருக்கடி கொடுப்பதற்காக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களால் சனல் -4 தொலைக்காட்சி குத்தகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக மேலதிக நேர வேலைகளை செய்யும் சனல்-4 வலையமைப்பு தன்னிடம், பெறப்பட்ட செவ்வியை முழுமையாக ஒளிபரப்ப முடியுமா என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.
அந்தச் செவ்வியை தாங்கள் பதிவு செய்வோம் என்றோ அல்லது சிறிலங்கா வலையமைப்புகள் ஊடாக வெளியிடுவோம் என்றோ அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறிய அவர், தற்போது அது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பணியகம் செல்லும் வழியில் அவர்கள் தன்னைத் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்ததால், அந்த இடத்தில் செவ்வியை ஒளிப்பதிவு செய்ய தயார் நிலையில் இருந்ததாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.
சரணடைவோரின் கதையை முடித்து விடுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிட்டதாக கூறிய அந்த இராணுவ அதிகாரியின் அடையாளத்தை வெளிப்படுத்துமாறும் சனல்4 தொலைக்காட்சியின் வெளிவிவகார செய்தியாளர் ஜொனாதன் மில்லரிடம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.
மரபுவழி இராணுவப் பலத்தை இழந்துள்ள நிலையிலும், விடுதலைப் புலிகளின் குழுக்கள் தமது இலக்குகளை அடைவதற்கு பிரித்தானிய ஊடகங்கள் மேலதிக நேரத்தை ஒதுக்கி பணியாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சியின் தகவல்களை வைத்துக் கொண்டு போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் நாடுகள், அவர்களுக்குத் தகவல் வழங்கியவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துமாறு கோர வேண்டும் என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக் கூறும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் ஏனைய குற்றங்கள், 40ஆயிரம் பேரின் கொலைகள் தொடர்பாக உண்மையிலேயே கரிசனை கொண்டிருந்தால், அனைத்துலக சமூகத்தின் முன்பாக அவர்கள் தமக்கு தகவல் வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முகம் தெரியாதவர்களின் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தம்மால் பொறுப்புக் கூற முடியாது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஊடகத்தின் அடிப்படைகளைக் கூட சரியாகப் புரிந்து கொள்ள முடியாத ஸ்ரீலங்காவின் ஐநா வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா, இத்தகைய வேண்டத்தகாத சவால்களை விடுத்து தனது அறியாமையை மேலும் மேலும் வெளிக்காட்டி வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
*************
தொடரும் கடத்தலை தடுக்க முடியா விட்டாலும் தவறாது எண்ணி கணக்குவைக்கும் சமத்துக் காவல்துறை!
இலங்கையில் கடந்த இருவருடங்களில் சுமார் 1,700 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் இந்தக் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 202 இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த அறிக்கையின்படி, பெரும்பாலானோர் கப்பம் கோருவதற்காக கடத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டில் 926 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் 774 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களால் கடத்தப்பட்டவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குகின்றனர்.
202 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளதாகவும் 275 சம்பவங்கள் தொடர்பாக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அல்லது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
*************
கண்டிக்கும் கருணாரட்ண!
யாழ்.குடாநாட்டில் பாரபட்சமின்றித் துணிகரமாகச் செய்திகளை வெளியிடும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கண்மூடித்தனமான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், உதயன் பத்திரிகை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிகரமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறானதொரு ஊடகத்தை முடக்குவதற்கான முயற்சியே செய்தி ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகும்.
இதனைப் புதிய இடதுசாரி முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
உதயன் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் இதற்கு முன்னரும் இலக்கு வைக்கப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் அங்கிருந்த ஊழியர்களைச் சுட்டுச் சென்றனர்.
எனவே இந்த விடயத்தில் காவல்துறை தொடர்ந்தும் மௌனம் காக்காது சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என்பது தெட்டத்தெளிவாகப் புலப்படுகின்றது.
அரச தரப்பினரே இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியிருப்பர் என தான் நினைப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*************
தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஊடகவியலாளரும் உதயன் செய்தி ஆசிரியருமான ஜி.குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து நாளை ஐந்து ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறும்.
குகநாதன் மீதான தாக்குதலை சகல உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக அமைப்புகளும் கண்டித்துள்ளன.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய உள்ளூர் ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் , எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஜெனிவாவில் இயங்கும் இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு உட்பட பல ஊடக அமைப்புகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன.
*************
சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் - ததேகூ
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் அறிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிககை குறைப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதேவேளை, சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சனத்தொகை பரம்பலின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், யுத்தம் காரணமாக பலர் வடக்கை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இதனால் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது பொருத்தமாகாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
*************